Friday, 21 September 2012

உள்ளத்தில் நல் ல உள்ளம்



உள்ளத்தில் நல் ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா


தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும்
உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா


மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்



கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான்
வள்ளல் வருகிறான்
அன்பு வள்ளல் வருகிறான்..
நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம்..
(கீதை சொன்ன கண்ணன்)

அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்..
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே
சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே..
(கீதை சொன்ன கண்ணன்)

பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்..
(
கீதை சொன்ன கண்ணன்)

குருவாயூருக்கு வாருங்கள்



குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRj6lgHG7kNc6QDgIbIbCWErGp05mbabrgiFiac4wA64HmCSFPvG8m6x1c4yQG0rNGe56QJ9ITNbqjir8IEuy0llVbAxj8u4ogiJ053b4VqLyMTHFX8lOYy7oZZjKw-Ko0e2iACz2ySRA/s400/cfullguruvayur1.jpg
(குருவாயூருக்கு...)

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம்

(குருவாயூருக்கு...)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சந்தியாகாலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகைசாத்து
மாலைகள் இடுவார் குறை ஓடி

(குருவாயூருக்கு...)

உச்சிக்காலத்தி சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக்குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

(குருவாயூருக்கு...)

மாலை நேரத்தில் சீவேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்
பக்தியில் பிறந்த உயர்நீதி

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்

(
குருவாயூருக்கு...)

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்
திருநாள் தானப்பா - தினமும்
திருநாள் தானப்பா!
(
குருவாயூரப்பா)

எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்
(
குருவாயூரப்பா)

உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே
(
குருவாயூரப்பா)




நீயுள்ள சன்னிதியே



நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா

கேட்டதும் கொடுப்பவனே


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா

(கேட்டதும் கொடுப்பவனே)