ராகம்: கரகரப்ரியா
தாளம்: ஆதிபழனிமலை முருகா பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்கு தா- ஞான
பழம் ஒன்று எந்தனுக்கு தா - முருகா
- பழனிமலை
இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது
நிலமை இதுவாக தலமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்குத்தா முருகா
நிம்மதியை எந்தனுக்குத்தா
- பழனிமலை
உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சில நாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி
தென்தமிழே அன்பே நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா -மனம்
மகிழ்ந்திட வரம் ஒன்று தா
- பழனிமலை
இராகம்: நாட்டை தாளம்: ஆதி
கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)
சேவிக்க வேண்டும் அய்யா சிதம்பரம்
சேவிக்க வேண்டும் அய்யா
- சேவிக்க வேண்டும் அய்யா
சேவிக்கவேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச்சந்நிதி கண்டு
- சேவிக்க வேண்டும் அய்யா
காரானை மாமுகத்து ஐந்து கரத்தானை
கற்பக ராயனை முக்குறுணியானை
žரார் புலியூர்பதி மேலைவாசல் வாழ்
தேவர் சிறைமீட்ட சேவற்கொடியானை
- சேவிக்க வேண்டும் அய்யா
No comments:
Post a Comment