Friday 21 September 2012

முகுந்தா முகுந்தா



முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா
(முகுந்தா முகுந்தா)
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா
(முகுந்தா முகுந்தா)
என்ன செய்ய நானோ தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவை தான்
(முகுந்தா முகுந்தா)

(.....மிருதங்கம் கொட்டுகிறது!
ஜெய ஜெய ராம், ஜெய ஜெய ராம், சீதா ராம், ஜெய ஜெய ராம்
அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்...கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்-ன்னு அழகாச் சொல்லறாரு வாலி)

நீ இல்லாமல் என்றும் இங்கே - இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை - எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் - புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு - அவர் கணக்கைத் தீர்ப்பாய்

உன் ஞானம் போற்றிடாத - விஞ்ஞானம் ஏது?
அறியாதார் கதை போலே - அஞ்ஞானம் ஏது?
அன்று...அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே - பொன்னான கீதை!
உன் மொழி கேட்க, உருகுகிறாளே - இங்கே ஓர் கோதை!

வாராது போவாயோ, வாசு தேவனே?
வந்தாலே வாழும், இங்கு என் ஜீவனே!
(ஜெய்..முகுந்தா முகுந்தா)

(இப்போ மனமயக்கும் கிட்டார் இசை....கூடவே ஜலதரங்கம்! சும்மாச் சொல்லக் கூடாது...ஹிமேஷ் ரெஷாம்மியா கலக்கி இருக்காரு! அவதாரங்கள் பட்டியல் - தசாவதாரத்தில் கிட்டத்தட்ட பாதிப் பட்டியல் போடறாங்க!)

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்

இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான்
உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
ஏந்திழை ஏங்கு கிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் - மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே - மணவாளனே!
(முகுந்தா முகுந்தா)

ஒவ்வொரு அவதாரத்திலும் பெருமாளுடன் திருமகளும் உருவமாகவோ, அருவமாகவோ வருவதை அழகா எளிய இனிய தமிழில் சொல்லுறாரு கவிஞர் - உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்!
அகலகில்லேன்! உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்! என்ற பாசுர வரிகள் எல்லாம் மனதில் இழையோடுகின்றன!

(பாட்டியின் ஸ்டைலான குரலில்...இருமிக் கொண்டே...)
உசுரோடு இருக்கான் - நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
வாடா மன்மதா...அழகா வாடா
உடனே வாடா.... வாடா.....
கோவிந்தா கோபாலா....)

முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா

No comments:

Post a Comment