Friday 21 September 2012


எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: மத்யமாவதி
தாளம்: ஆதி


ஆடாது அசங்காது வா கண்ணா...
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே - எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா

ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே - நீ
(ஆடாது அசங்காது வா)

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே - அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே


பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே


பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே

(ஆடாது அசங்காது வா)

No comments:

Post a Comment