Friday 21 September 2012

வான் போலே வண்ணம் கொண்டு



வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே - பல விந்தைகள் செய்தவனே!
                                                                                                                      (வான் போலே)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
அன்னை இன்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே

மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
                                                                                                                      (வான் போலே)

http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/TT-mT-Z9pRI/AAAAAAAAKvg/b_46t64QBzs/s320/radhakrishna1.jpg
பெண்கள் உடை எடுத்தவனே
தங்க குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க, காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் காதல் எல்லாம்
என்றும் என்றும் வாழும் கண்ணா!
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!

(வான் போலே)
ரகுபதி ராகவ ராஜாராம் !  பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் ! பதீத பாவன சீதாராம் !
ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் ! கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !
கோவிந்த ஹரி ஹரி ! முகுந்த ஹரி ஹரி !




No comments:

Post a Comment