Friday 21 September 2012

ராகம் :தன்யாசி தாளம் : ரூபகம்

                                     பல்லவி

 
பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரில்லை

வரகுண பாலகிருஷ்ணன் பாதமலர்.....

அனுபல்லவி

நீலமுகில்போலழகன் நிறைமதி வதனமதனில்

இளநகை நிலவருள் ஒளி தவழும்....... (பாலகிருஷ்ணன்)

சரணம்

கோகுலம் பிருந்தாவனம் யமுனாவிஹாரி கோபாலன்

கோபிஜன மன மோஹன முரளி கான விலோலன்

வியாகுலம் தவிர்த்து அன்பர் மனதில் வாழ் கருணாளால பாலன்

மழை தடுக்க கோவர்தனமலை எடுத்த திண்தோளன்

பிழைபொறுத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன்...(பாலகிருஷ்னன்)

No comments:

Post a Comment